BLOG
2

நவரத்தினம்(GEMS)

நவரத்தின கோபுரம்

ஜாதகத்தில் லக்ன பலம் மிக முக்கியம். லக்னத்திற்க்கு 5 , 9-க்கு அதிபதியின் ரத்தினம் அணிவது சுப பலன் தரும். பிறந்த தேதிக்கும் ரத்தினம் அணிவது, சிறப்பான விஷயம் தான். மேலும் ஆங்கில மாத கணக்குப்படி ரத்தினம் அணியும் முறை நல்ல பலனைத் தரும். ஒருவர் பிறந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரம் என்று தேர்ந்தெடுத்து, நவ கிரக, லட்சுமி, ஹோமம், யாகம் வளர்த்து பூஜைப் பொருட்களுடன் ரத்தினத்தையும் வைத்து ஆவாகனம் செய்து ரத்தினத்தை அணிந்தால் விரைவாக நல்ல பலன் கிட்டும். ராசிப்படி ரத்தினம் அணிய அனுபவம் மிக்க ஜோதிடர் அனுமதி தேவை. தவறான ரத்தினம் அணிவதால் பிரச்சனைகள் அதிகமாகும் குறையாது. சரியாக தேர்ந்தெடுத்து ரத்தினம் அணிவதால் திருமணத்தடை விலகி, திருமணம் கைகூடிவரும், தொழிலில் வெற்றி கிட்டும், நோய் நொடிகள் குறையும், விலகும். துர்சக்தியை துரத்தும்.மேலும் தன்னைக்காக்கும் கவசமாக இருக்கும். பலரும் தவறான ஜாதகத்தை வைத்துக்கொண்டு பலன் தேடி அலைகின்றார்கள். பலன் சொல்ல எப்படி சரியாக வரும்? ரத்தினம் தேர்வு செய்யும் முன் ஜாதகத்தை சரி பார்ப்பது அவசியம்! சரியான ரத்தினம் அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணம், சொல், செயல் ஒரு நேர் கோட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் வளமாகும்.ரத்தினம் அணிந்து வாழ்வுயர வாருங்கள்! வெற்றி நிச்சயம்!


திருமணப்பொருத்தம்(wedding match)

ஜாதக ராசிகட்டதில் கிரக அமர்வு சரியாக உள்ளதா? அடுத்து சாரபலம் சரியாக உள்ளதா? நட்சத்திர பொருத்தம் சரியாக உள்ளதா? செவ்வாய் தோஷம், நாக தோஷம், சஷ்டாஷ்டம தோஷத்தையும் கணக்கில் கொண்டே மணப்பொருத்தம், பெயர் பொருத்தம் பார்த்தபின், இருமண பொருத்தத்தை இணைக்க வேண்டும். திருமணம் என்பது ஒருநாள் நிகழ்ச்சி. வாழ்க்கை என்பது வாழ்நாள் பிரச்சனை. பத்து பொருத்தம் பார்த்தால் மட்டும் போதாது கட்டதை சரி பார்த்தே, ஜாதகத்தை அலசி ஆராய்ந்து வரனை இணைத்தால் மட்டுமே மங்கள வாழ்க்கை அமையும்.

பரிகார சாஸ்திரம்(parigara sasthiraa)

ஜோதிடத்தில் எந்த ஸ்தானம் கெட்டு உள்ளதோ அதற்கு பரிகாரம் செய்தால் தடைகள் விலகும் . வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை ஹோமம், யாகம் வளர்ப்பது உயர்வு தரும். ’தான தர்மங்கள்’ துர்பலத்தை குறைக்கும். விதியின் வலிமையை குறைக்கவும், கூட்டவும் நம்மால் முடியும். எந்திர வழிபாடு, காயத்ரி மந்திர வழிபாடு, ரத்தினம் அணிய விதியின் போக்கை மாற்றி அமைக்கும், தோஷத்தை போக்கும். பரிகாரம் என்பது கண் பார்வை குறைந்தவருக்கு, கண்ணாடி போன்றது. மழையில் நனையாமல் இருக்க குடை பிடிப்பதற்குச் சமம். ஊருக்கே குடை பிடிக்க முடியாது. சரியான ஜோதிடர் உங்களுக்கு, சரியான வழி காட்டியாக, கலங்கரை விளக்கமாக, இருப்பார். மேலும் பெயர் மாற்றம் கூட உயர்ந்த பரிகாரம் தான் . தங்கள் விரும்பினால் சிறந்த அந்தனர்களை கொண்டு பூஜை பரிகாரம் செய்து தரப்படும் . தேவைப் படும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்.

பிரசன்ன சாஸ்திரம்(PRASANNA SASTHIRAM)

நீங்கள் கேட்கும் குழப்பமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். வேலை கிடைக்குமா? கிடைக்காதா? வீடுகட்ட முடியுமா? முடியாதா? என்ன படிக்கலாம்! படிக்ககூடாது! திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ன தொழில் செய்யலாம்! செய்யகூடாது! இதுபோன்ற குழப்பமான கேள்விகளுக்கு , தேடல்களுக்கு பிரசன்னம் மூலம் பதில் கிடைக்கும். நம்பிக்கையுடன் வாருங்கள் திடமான முடிவோடு , மனநிறைவோடு செல்லுங்கள்.

கைரேகை சாஸ்திரம்(PALMISTRY)


ஜாதகம் ,பிறந்த தேதி ,பிறந்த நேரம், இல்லாத நபர்களுக்கு கைரேகை சாஸ்திரம் மூலம் கல்வி ,ஆயுள், ஆரோக்கியம் ,தனச்சேர்க்கை, திருமண யோகம் , வீடு,மனை யோகம், சர்ப்பதோஷம் ,செவ்வாயின் தாக்கம், அரசபதவி ,குரு அனுக்கிரகம் ,மேலும் விதியின் விளையாட்டை அறிந்து சொல்லமுடியும். விதிக்கு கட்டுப்பட்டே நாம் வாழ்க்கை உள்ளது. அதன் வழியில் நாம் செல்கிறோம். விதியின் நன்மை, தீமை தாக்கத்தை கூட்டும், குறைக்கும் சக்தி நமக்குள் உள்ளது. உயர்வுக்கும் தாழ்வுகும் நாமே காரணம். அறிவே இறை வெளிச்சம் .அதன் துணையோடு நம் இலக்கை அடையமுடியும். கைரேகை என்பது இறைவன் எழுதிய ஜாதகம். மனிதன் எழுதும் ஜாதகத்தில் , கணிப்பில் தவறு இருக்கலாம் இரண்டையும் இனைத்து பார்க்க உங்கள் பிறப்பின் ரகசியம் வெட்ட வெளிச்சமாக தெரியும். ஜோதிட ஆராய்ச்சியாளர்களுகே இதன் மகத்துவம் தெரியும். கைரேகை மூலம் உன் எதிர்காலத்தை அறிய முடியும். நம்பிக்கையுடன் வாருங்கள், நான் உங்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறேன்.

வாஸ்து(vaasthu)

‘ஒரு வீட்டின் எதிர்மறை சக்தியை விலக்கி நேர்மறை சக்தியை உள்ளே கொண்டு வருவதே வாஸ்து வாகும்.’’ வாஸ்து குறையுள்ள வீட்டில் நிம்மதியாக தூங்கமுடியாது. அங்கு துர்சக்தி ஆழுமை இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் சந்தோஷம் வீட்டிற்குள் இருக்காது. பஞ்ச பூத சக்தியை சமபடுத்துவதே வாஸ்துவாகும். தொழிற்தடை, கல்வித்தடை, குடும்பத்தில் பிரிவு, மனவேதனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஜாதக சுப பலனை அனுபவிக்க தடையாக இருக்கும் .வாஸ்து பலம் உள்ள வீட்டில் இறை சக்தி வாசம்செய்யும், தொட்டது துலங்கும், ஜாதக தோசத்தின் தாக்கத்தை தடுக்கும். வீட்டில் உள்ள நபர்களை கவசமாக இருந்து காக்கும். புதிதாக வீடுகட்டும் நபர்கள் சிறுதொகை செலவுசெய்து வீட்டின் வாஸ்து வரைபடத்தை பெற்று சுபமங்களமாக வாழலாம். நல்லதை சொல்வோம் நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் . வாழ்க வளமுடன்.

MODEL DRAWING

RECENT VAASTHU PLAN

வாஸ்து வரைபடம்

HOUSE OWNER
Mrs.SURESH
CONTRACTER: CHINNA DURAI
LOCATION: erukkanerry, Annanagar, Chennai.

காதல் திருமணமா - நிச்சய திருமணமா

காதல் திருமணமா நிச்சய திருமணமா என்பதனை இங்கே பார்ப்போம். அவரவர் விதிவழி வந்தனர் என்பார் திருமூலர். Life-is-recorded. விதியின் வழியில் நாம் பயணம் செய்கின்றோம். நமது கருமமே நம்மை வழி நடத்துகிறது போன பிறவியில் மரணம் அடையும் முன் நீ என்ன நினைவோடு இறந்தாயோ அதன் தொடர்ச்சியே இந்த பிறவியில் இன்று நீ வாழும் வாழ்க்கை. மனிதர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இதில் ஏதோ ஒரு ஆசையோடு இறந்துவிடுகிறார்கள். இந்தப் பதிவே விஞ்ஞானப்படி DNA வாக மாறுகிறது. இங்கே ஓசையிம் ஒலியும் இதற்கு பெரும் துணைபுரிகிறது. ஒருவர் இறந்த திதியே அடுத்த பிறவிக்கு ஆரம்பமாக அமைகிறது மேலும் காரணம் இல்லாமல் ஒரு காரியம் இல்லை. 30 நாள் உழைத்தால் ஒரு நிறுவனத்தில் அடுத்த ஒன்றாம் தேதி சம்பளம் கிடைக்கும் .அதுபோல இந்த பிறவியில் போன பிறவியின் பாவ புண்ணியத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இனி காதல் சமாச்சாரத்திற்கு போவோம். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் காரணம் இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் காதல் திருமணம் என்று இருந்தால் அது நடந்தே தீரும். அது நடக்குமா நடக்காதா ,இல்லை பகல் கனவா என்பதை கண்டுபிடித்து சொல்வதுதான் ஜோதிடரின் வேலையாகும். மேலும் பரிகாரம் செய்வதால் காதல் கைகூடுமா என்று கூட சிலர் கேட்கிறார்கள். நம் முன்னோர்கள் சொன்ன விஷயத்தை உங்கள் முன் வைக்கிறேன். இங்கே இன்றும் ஆண்பால் பெண்பால் இன ஈர்ப்பு மனிதர்களை ஆட்டி வைக்கிறது. காதல் போர்வையில், காம விளையாட்டை தொடங்கிவிடுகிறார்கள். காமம் முடிந்தால் இங்கே காதல் இல்லை. இனி பரிகாரத்துக்கு செல்வோம் இங்கே அறியாது செய்த தவறுகள், தெரிந்து செய்த தவறுகள், தெரிந்தும் தெரியாமல் தவறி செய்த தவறுகள் இவற்றில் சில தவறுகள் பரிகாரத்துக்கு கட்டுப்படும். விதியை மதியால் வெல்ல முடியும் இதைத்தான் பரிகாரம் என்கிறோம். அனைத்து பரிகாரங்களும் பலன் தருவதில்லை மேலும் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், மகான்கள், ரிஷிகள், இதனைத்தான் செய்து வந்தார்கள். இல்லற சுகத்தை நாடும் சராசரி மனிதர்கள் விதியை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். இதற்கு குண்டலினி யோகம் துணைபுரியும். மதி கெட்டு போனால் விதி கெட்டுப்போகும் என்பார்கள். அறிவே இறை வெளிச்சம் என்பதனால் எது சரி, எது தவறு என்று பிரித்தறியும் திறன் வேண்டும். இந்த பூமியில் பிறக்கும் போதே பலரும் பாவமூட்டையை பெரியதாக சுமந்துகொண்டு வருகிறார்கள். நாம் செய்யும் புண்ணியத்தால் அதை சிறிய மூட்டையாக மாற்ற வேண்டும். இதற்குத்தான் கோயில்கள் குளங்கள் தான தருமங்கள். மனிதர்கள் பாவமூட்டையை இன்னும் பெரியதாக்கி அதிக பாவத்தை செய்து 120 வயது வாழ வேண்டிய மனிதன் 25 வயதில் துர் மரணம் அடைந்து விடுகிறார்கள். தன்னை உணர்ந்தவன், விதியை அறிந்தவன், தவறு செய்வதில்லை. உன்னை நீ தான் செதுக்குகிராய், உங்கள் எண்ணமே அடுத்த செயலுக்கு காரணமாகிறது நன்மைக்கும் தீமைக்கும் நீயே காரணம். நம்பிக்கைதான் மகாசக்தி என்பதனை மறந்து விடுவதேன் . போன பிறவியின் ஆசைதான் இப்பிறவியின் விதியாகி நொடிப்பொழுதும் நம்மை வழி நடத்தி செல்கிறது. விதி வலி வந்தது தான் காதல், காதலை வாழவிடுங்கள். உண்மையான காதல் அன்பால் துவங்கி அன்பால் முடியும். தவறான காதல் - காதல் போர்வையில் காமத்தில் முடியும். அன்பே காதல், காதல் திருமணமா - நிச்சய திருமணமா என தெரிந்து கொள்ள வாருங்கள்.
திருமணம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி . வாழ்க்கை என்பது வாழ்நாள் பிரச்சனை, ஒருநாள் நிகழ்ச்சியில் வாழ்நாளை தோலைத்து விடாக் கூடாது யோசித்துப் பாருங்கள். வரும் முன் காப்பவன் தான் அறிவாளி வந்தபின் தவிப்பவன் ஏமாளி.


"ஜோதிடம் உங்கள் வழிகாட்டி"

முன் அனுமதி பெற்று வரவும்.

கவிஞர் ஶ்ரீ மதுரகாசி

விஞ்ஞான ஜோதிட ஆராய்ச்சியாளர்